இடுகைகள்

பழந்தமிழர் பண்பாடு

முன்னுரை :            'தமிழ்'. மிகப் பழைமையான உயர்தனிச் செம்மொழி, தமிழைப் பேசிய ' தமிழ் இனம் '. அம்மொழியினும் தொன்மையானது. அப்பழைமையான தமிழ் இனத்தின் பண்பாட்டையும், பெருமையையும் கற்போர் அறிவர். இனித் தமிழரின் பழைமையான பண்பாடு பற்றிக் காண்போம். பண்பாடு :         பண்படுத்துவது என்பதனால், உருவாவது பண்பாடு ஆகும். மனிதன் பண்பட, அவன் உள்ளம் பண்பட வேண்டும். மனித உள்ளம் பண்படுவது என்பது, பெரும்பாலும் அவன் கற்கும் கல்வியால் எனலாம். கல்வி என்பது இன்று உள்ளதுபோன்ற ஏட்டுக்கல்வி மட்டும் அன்று; 'நாகரிகம்' என்பது மக்களின் திருந்திய வாழ்க்கை ஆகும். 'பண்பாடு' என்பது திருந்திய ஒழுக்கமாகும். சுருக்கமாகக் கூறுவதானால், ' உள்ளத்தின் செம்மையே பண்பாடு ஆகும். பண்பாடு நாகரிகத்தினும் சிறந்ததாகும். பண்பாட்டுச் சிறப்பு:         ' பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்' எனக் கலித்தொகை, பண்பாட்டுக்கு இலக்கணம் கூறுகிறது. அதாவது, உலக வழக்கம் அறிந்து ஒழுகுதலே பண்பாடாகும். பெருமை, சான்றாண்மைக் குணங்களைப் பெற்றவருக்கு இது இயலும். எனவே, பண்டைத் தமிழர...

பசுமைப் புரட்சி - கட்டுரை

  முன்னுரை:                 "வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" - என்ற பாரதியின் குறிக்கோள் நிறைவேறப் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தி பெருகவில்லை. அதற்கு நடத்தும் விவசாயப் புரட்சியே பசுமைப் புரட்சி எனப்படும். பசுமைப் புரட்சி:                   உணவுப் பிரச்சினையைத் தீர்க்க அரசு முயற்சித்து வருகிறது. அதன் முக்கிய நோக்கம் உணவு உற்பத்தியைப் பெருக்க  விவசாயத்தை ஊக்குவித்தலாகும். இதற்கு நீர்ப்பாசனம் நன்கு கவனிக்கப்பட்டது. பல்நோக்குத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. நாடு வளம் கொழிக்கப் பல்வேறு அணைகளைக் கட்டி நீர்ப் பாசன வசதியைப் பெருக்கியது. பக்ராதங்கல், தாமோதர், ஹீராகுட், துங்கபத்திரா, நாகார்ச்சுனா போன்ற அணைத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பவானிசாகர், மணிமுத்தாறு, அமராவதித் திட்டம் போன்ற திட்டங்களை உருவாக்கியது. அரசுத் திட்டங்கள்:                     விவசாய முன்னேற்றத்திற்கு நமது அரசு பல முறைகளைக் கையாளுகின்றது. புத...

சுதந்திர தின பேச்சு போட்டி

பள்ளியே எனது வீடு  கல்வியை எனது வாழ்க்கை  என வாழ்ந்து வரும்  தலைமை ஆசிரியர் அவர்களே, உயரிய நோக்கத்தில்  உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும்  உன்னதமான ஆசிரியப் பெருமக்களே, சிட்டுக்குருவிகளே தட்டான் பூச்சிகளே  முயல் குட்டிகளே குட்டி மேதைகளே வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே என் அன்பினிய மாணவச் செல்வங்களே... உங்கள் அத்தனை பேரையும்  வணங்கி முடித்து பேசப் போகிறேன் என் தலைப்பை பிடித்து அல்லும் பகலும் உழைத்து..  அடியிலும் உதையிலும் பிழைத்து..  ஒற்றுமையோடு நிலைத்து  வேற்றுமை எண்ணம் களைத்து...  அடிமை விலங்கினை உடைத்து...  அழுதோர்  கண்ணீரை துடைத்து....  பெற்ற சுதந்திரக் காற்றை சுவாசிக்க...  போராட்ட வீரர்கள் தியாகத்தை யோசிக்க...  சிந்திய ரத்தமும் பெருமையை சொல்லுமே...  சுதந்திரம் காற்றும் பெருமையாய்  வெல்லுமே. " பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்  நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்பதை உணர்ந்து   தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா!  இப்பயிரை கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ?. .. என்று கண்ணீர் வி...

சுதந்திர தின கவிதை

அடிமை ஆக்குவதே   ஆங்கிலேயர்கள் வழக்கம்...  இந்தியருக்கு இல்லை அடிபணியும் பழக்கம்...  அதனாலேயே பிறந்தது  விடுதலை முழக்கம்...  அதை பெரும் வரை யார்  கண்ணிலும் இல்லை உறக்கம்....  ஆங்கிலயரின் அடிபணிய வைக்கும் நோக்கம் ஒற்றுமைக்கு வித்திட்ட விடுதலையின் மார்க்கம்.. அனைவரின் கைகளும் ஒற்றுமையில் கோர்க்கும்...  அடிமை சங்கிலியை  உடைத்தெறியப் பார்க்கும். ...  நினைத்த நாளும் வந்தடைய ... மறித்த ஆளும் வெந்துடைய... தியாகிகளின் அறப்போர் வெடிக்க... அடிமை சங்கிலியை தியாகிகள் உடைக்க இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க....  அந்த சுதந்திர காற்றை சுவாசிப்போம். நம் முன்னோர்கள் தியாகத்தை நேசிப்போம்...

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

பழையன மறவாப் பண்பால்  பண்பாடு போற்றும் சிறப்பால் தமிழ்ப்பால் மீது கொண்ட விருப்பால் அறத்துப்பால் மீதுள்ள ஈர்ப்பால் பொருட்பால் கிடைத்த மலைப்பால் இன்பத்துப்பால் நடக்கும் உள்ளன்பால் நாவும் இனிக்கட்டும் கரும்பால் புவியெங்கும் ஒலிக்கட்டும் தமிழ்ப்பால்! இணைப்பால் இருகரம் குவிப்பால் வரவேற்கிறேன் அனைவரையும் எனது அன்பால்... பசுமையும் பாரம்பரியமும் .... "பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும், அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும், - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்" . என்றார் பாரதி.  இந்த கவிதை ஒன்றே போதும் எம் நாட்டின் பசுமையும் பாரம்பரியமும் பற்றி தெரிந்துகொள்வதற்கு  "நெல்லின்றேல் உணவில்லை உணவின்றேல் உயிரில்லை உயிரின்றேல் உலகமில்லை உலகமின்றேல் உலகாளும் மன்னனில்லை எல்லாம் நெல்லுக்குள் அடக்கம் நெல்லுக்குள் மன்னனும் அடங்கும் எண்ணமுடியா பெருமைசார் நெல்போல வாழ்க" எ ன மன்னனுக்கு வாழ்த்துரைத்த அவ்வையின் வழி வந்தது எம் பாரம்பரியம்.  "கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன் ம...

செய்தித்தாள் - கட்டுரை

 முன்னுரை:           காலையில் எழுந்ததும் செய்தித்தாள் படிப்பது என்பது நம் பழக்கங்களுள் ஒன்றாகிவிட்டது. உள்ளூர்ச் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை அனைத்தையும் தாங்கி வரும் நண்பன் செய்தித்தாள். ஒருநாள் செய்தித்தாள் படிக்கவில்லையெனில் நாம் தவித்துப் போகிறோம். அதனால் சிறந்த நண்பன் செய்தித்தாள். செய்தித்தாள்களின் வகை:            செய்தித்தாள்களை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நாளிதழ் (Newspaper) மற்றொன்று இதழ்கள் (Magazine) நாள்தோறும் காலையிலும் மாலையிலும் வரும் செய்தித்தாள்கள் நம் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பற்றிக் கொள்கின்றன. தமிழிலும் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் செய்தித்தாள்கள் வரக் காண்கிறோம்.செய்தித் தாள்களில் வார இதழ், திங்கள் இதழ். திங்களிரு முறை இதழ் எனப் பலவகை உண்டு. இவையும் செய்திகளைச் சொல்வனவே. செய்தித்தாள்களில் அன்றாடச் செய்திகள் இருந்தால் வார, மாத இதழ்களில் செய்திகளின் தொகுப்பாக அமைந்து இருக்கும். சிறுகதைகள், தொடர்கதைகள், அறிவியல் கட்டுரைகள், விளையாட்டுச் செய்திகள், விளம்பரங்கள், வானொலி நிகழ்ச்சிகள், மக்கள் கர...

நம் நாடு - கவிதை

அளப்பறிய அனைத்துவள நாடு எந்தையரும் முந்தையரும் வாழ்ந்திருந்த நாடு பொன்விஞ்சும் நவமணிகள் விளைவுதரும் நாடு பொங்கிவரும் அருவிகளும் கொட்டுகின்ற நாடு பொன்வண்ண கதிரொளியில் மின்னுகின்ற நாடு பொன்மகளின் கவிமகளின் மறமகளின் நாடு கண்ணலோடு மாபலாவா ழைக்கனிகள் நாடு கழனிகளும் காடுகளும் அருள்சுரக்கும் நாடு கலைகளெலாம் ஒருங்கிணைந்து வளர்ந்திட்ட நாடு காவியங்கள் பலபடைத்து மொழிவளர்த்த நாடு விலைமதியா பெட்டகங்கள் கோயிட்கொண்ட நாடு விரதீரம் உயிர்போன்று உற்றிருக்கும் நாடு அலைகடட்கள் முப்புறமும் தாலாட்டும் நாடு ஆகாயம் முட்டுகின்ற புகழ்பெற்ற நாடு தலைமையேற்று உலகாள வல்லதான நாடு தாய்மைதனை தெய்வமென வணங்குகின்ற நாடு கனிவளங்கள் நீர் வளங்கள் கொண்டதான நாடு கண்கொள்ளா இயற்கைவளம் நிறைந்ததான நாடு பனிமலையும் அரணாக விளங்குகின்ற நாடு பண்பண்பு ஆன்மீகம் ஒளிர்கின்ற நாடு வனிதையர்கள் எங்கெதிலும் முன்நிற்கும் நாடு வற்றாமல் செல்வங்கள் வளர்ந்துவரும் நாடு தனித்தன்மை தான்கொண்டு தலைநிமிர்ந்த நாடு தாய்நாட்டின் அரும்பெருமை போற்றிநீயும் பாடு! - கவிஞர் பெ.சித்தையன்

Population Growth And Control - Essay

INTRODUCTION :      Population refers to the total number of people living in a specific area or country the Global population has been increase in rapidly in recent decades and projected to reach around 9 billion by 2050. The population growth rate varies by country and region, with the some area experience in higher rates of growth than others. Population growth can have a significant impact on resources, environment and economy of a country. IMPACT ON ECONOMY:      The increasing population also has an impact on the economy. As the population grows, so does the demand for housing, infrastructure and services such as health care and education. This can lead to issues such as housing and infrastructure problems, as well as strain on healthcare and education systems. Additionally, the increasing population can also put pressure on employment and job market. CAUSES OF POPULATION :  i. Litracy and unawareness :      In India around 36% is...

காமராஜர் பேச்சுப்போட்டி-3

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும் . சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு அறத்தைநிலை காணும் .. கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும்  ஒன்றுமில்லை... ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெனைத் தூக்கி விடு பேரிறைவா.... இறையை வணங்கி அவையை வணங்கி அவையில் இருக்கும்  அனைவரையும்  இறையாய் வணங்கி  என் உரையை துவங்குகிறேன்.... நாளெல்லாம் பொழுதெல்லாம் தேசப் பற்றில் வாழ்ந்தவர், பிள்ளையெலாம் பள்ளிச்செல்ல கல்விக் கண்ணைத்  திறந்தவர், கொள்ளைகொள்ளையாய்ச்  சொத்து சேர்க்கா  சொக்கத் தமிழராய் வாழ்ந்தவர் மக்கள் தொண்டை  மனதில்கொண்டே  மக்களாட்சி கண்டவர் புவிவாழ்க்கை ஆசைஇல்லாப்  புனித வாழ்க்கை வாழ்ந்தவர். என்ன கொடுப்பான்  எதை கொடுப்பான்  என்று இவர்கள்  என்னும் முன்னே  கலை கொடுப்பான்  கல்வி கொடுப்பான்  போதாது போதாதென்றால்  இன்னும் கொடுப்பான்  இவையும் குறைவென்றால்  எங்கள் தலைவன்  தன்னை ...

காமராஜர் கட்டுரை 2

முன்னுரை :             அயராது பொதுநலத்தொண்டை மேற்கொண்டு, கல்வியும் செல்வமுமின்றி உழைத்து ஒருவர் உயர்ந்தார்! எவரும் எண்ணிப்பார்க்க முடியாத ஒருநிலைக்கு உயர்ந்தவர் அவர் ஒருவரே! அவர்தாம் காமராசர். ' கர்மவீரர்," 'படிக்காத மேதை', 'கல்விக்கண் திறந்தவர்', 'ஏழைப் பங்காளர்' என்றெல்லாம் பலவாறு பாராட்டப்பட்டார். பிறப்பும் வளர்ப்பும் :            விருதுநகரில் எளிய குடும்பத்தில், குமாரசாமி -சிவகாமி தம்பதியரின் மகனாக 15.07.1903இல் பிறந்தார்; இளமையிலேயே தந்தையை இழந்தார். ஆறாம் வகுப்புடன் அவர் கல்வி முடிவுற்றது. வறுமை காரணமாக. வேலைக்குச் சென்றார். எனினும் மனம் தாய்நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டது. ஜாலியன் வாலாபாக் படுகொலைபற்றி அறிந்தபின், அவர் காங்கிரசு பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்; காந்தியடிகளின் தொண்டரானார்; சத்தியமூர்த்தி ஐயாவைத் தம் அரசியல் ஆசானாக ஏற்றுக் கொண்டார்; தொண்டால் சிறந்து, தமிழ்நாடு காங்கிரசின் தலைவரானார். பலவேறு நூல்களைக் கற்றுப் பல்துறை அறிவைப் பெற்றுச் சிறந்த நிர்வாகியாகப் பணியாற்றினார். தொண்டும் தூய்மையும்: ...

முடிவுரை 13

கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்... சில காவியப் பொருள்களை தூவி விட்டாள்... அலையனும் எண்ணங்கள் ஓடவிட்டாள்... அதை ஆயிரம் உவமையில்  பாட விட்டாள்... குழந்தையின் கோடுகள் ஓவியமா இந்த குருடன் வரைவதும் காவியமா நினைத்ததை உரைத்தேன் நடுவர்களே... குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்.... பேசியது சுருக்கம்... தேவையில்லை விளக்கம்... முடிவில் வணங்குவது என் வழக்கம்... வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்....

காமராஜர் கவிதை

ஏழைகளின் அறிவுப் பசியை போக்க அவர்களின் வயிற்றுப் பசி போக்கியவரே... பள்ளிகள் பல திறந்து தம் பதவியில் சிறந்து  அரசியலில் உயர்ந்து தமிழகத்தில் தலை நிமிர்ந்து  இறந்தும் வாழும் ஏழைப்பங்காளரே..... உங்களால் வாழுது அறமே  உங்களை பாடுவது எங்கள் வரமே  அவர் நிறமோ கருப்பு அவர் தரமோ சிறப்பு அவர் ஆறடி உயரம் அவரால் ஏழ்மைக்கு துயரம்  அவர் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை அவரை படிக்காதவர் என்று  எவரும் இல்லை  அள்ளிக் கொடுத்தவர்  கைகளோ நீளம் கோடி யுகம் கடந்தும் அவர் புகழ் இம்மண்ணிலே வாழும்....

முன்னுரை -17 ஆன்மீக முன்னுரை

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும் . சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு மறத்தைநிலை காணும் .. கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும்  ஒன்றுமில்லை... ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெனைத் தூக்கி விடு பேரிறைவா.... இறையை வணங்கி அவையை வணங்கி அவையில் இருக்கும்  அனைவரையும்  இறையாய் வணங்கி  என் உரையை துவங்குகிறேன்....

கூட்டுறவே நாட்டுயர்வு

முன்னுரை :         மனிதன் கூடிவாழும் தன்மையுடையவன். தனிபட்ட முறையில் ஒரு காரியத்தைச் செய்வதைவிடப் பலர் செய்தால் காலமும் பணமும் மிச்சப்படும், துன்பம் குறையும். தனித்தனியே பிரிந்து வாழும்போது உண்டாகும் செலவு சேர்ந்து வாழும்போது உண்டாவதில்லை. ஆகவே, நாமெல்லோரும் எல்லாக் காரியங்களையும் கூட்டாகச் சேர்ந்தே செய்ய வேண்டும். இதுவே கூட்டுறவு இயக்கம் எனப்படும். இதனையே சுவிஞர் பாரதி ' ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்றார். மனிதன் தேவைகள்:         பிறர் துணையின்றி மனிதன் வாழ முடியாது. மனிதன் உணவுக்கும் உடைக்கும், உற்ற பிறவேலைக்கும் மற்றவரை நாட வேண்டியுள்ளது. உழவன் ஒருவனுக்கு உணவு தந்தால் நெசவாளி அந்த உழவனுக்கு உடை அளிக்கிறான். எனவே ஒருவருக்கொருவர் இணைந்துதான் செயல்பட வேண்டும். மக்கள் ஒன்றுபடாது போனால் எதுவும் நடைபெறாது. கூட்டுறவுக் கொள்கை:           கூட்டுறவே நாட்டுயர்வு' என்பதும் ' கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ' என்பதும் இந்நாட்டுப் பொன் மொழிகள். தனி மனிதனுக்காகச் சமூகமும் சமூகத்திற்காகத் 'தனி மனிதனும்' என்பது கூட்டுறவுக் கொள்கை. இதை அடிப...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - கட்டுரை

முன்னுரை :            " ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே"  என்று பாரதியார் கூறியுள்ளார். விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற உயிர்கள் கூட்டம் கூட்டமாக ஒற்றுமையாக வாழ்கின்றன. அப்படியிருக்கும் போது ஆறறிவு படைத்த மனிதன் ஒற்றுமையாக வாழ்வதுதான் நியதி.   ஒற்றுமையின் அடித்தளம் :               " ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது " என்பார்கள். அதுபோல குழந்தைகளிடம் பெரியவர்கள் ஒற்றுமையுணர்வை சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒற்றுமையை வளர்க்கும் நீதிநெறிக் கதைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெரியோர்கள் சொல்லிக் கொடுக்கும் செய்தி, கதைகள், பழமொழிகள் என்று எதுவாக இருந்தாலும் குழந்தைகள் மனதில் ஆழப் பதிந்துவிடும். இன்றைய இயந்திர வாழ்க்கையில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுவதால், வீட்டிலுள்ள தாத்தா, பாட்டி போன்றவர்களால் மட்டுமே குழந்தைகளிடம் ஒற்றுமையை வளர்க்கும் பண்புகளைச் சொல்லித்தர முடியும். அவர்களையடுத்து, குழந்தைகளிடம் ஒற்றுமையுணர்வை கொண்டு வரும் பொறுப்பு ஆசிரியர்களிடம்தா...

சாரணர் இயக்கம் (Scout) - கட்டுரை

முன்னுரை :        சிறிய வயதிலேயே ஒழுக்கமான பழக்க வழக்கங்களை கற்றுத்தரும் அமைப்பு, 'சாரணர் இயக்கம்' ஆகும். சிந்தனையால், செயலால், சொல்லால், முயற்சியால் ஒரு மனிதனை எல்லா வகையிலும் செம்மைப்படுத்தும் இயக்கம் சாரணர் இயக்கமாகும். சாரணர் இயக்கத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம் தோற்றம் :        இவ்வியக்கம் 1907-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் ' ராபர்ட் பேடன் பவுல்' என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நடந்த போரில் பல வீரர்கள் படுகாயமடைந்தனர். அந்தப் போரில் லெப்டினெண்ட்டாக பணியாற்றியவர் பேடன் பவுல் ஆவார். போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சையிலும் பிற உதவிகளிலும் இளைஞர்கள் செய்த உதவிகள் பேடன் கவுலைக் கவர்ந்தது. எனவே இத்துறையில் சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்தால் நாட்டிற்கு பல வழிகளில் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினார். அந்த அடிப்படையில்தான் பள்ளிச் சிறுவர்களைக் கொண்டு 'சாரணர் இயக்கம்' தோற்றுவிக்கப்பட்டது. அமைப்பு :           12 முதல் 17 வயது வரையிலுள்ள சிறுவர்களைக் கொண்டு இவ்வியக்கத்தை அவர் ஆரம்பித்தார்...